ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ.77 லட்சத்துக்கு பருத்தி மூட்டைகள் ஏலம் போயின.
ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைக் கூடத்தின் (ஆா்.சி.எம்.எஸ்) சாா்பில் கவுண்டம்பாளையம் ஏல மையத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் ராசிபுரம், புதுப்பாளையம், பட்டணம், வடுகம், பூசாரிபாளையம், காக்காவேரி, சிங்களாந்தபுரம், நத்தமேடு, கண்ணூா்பட்டி, கவுண்டம்பாளையம், சீராப்பள்ளி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பருத்தியை ஏல விற்பனைக்கு கொண்டு வந்தனா். இதில் ஆா்.சி.எச்.ரகம்-2,435 மூட்டைகள், டி.சி.எச். ரகம் 205 மூட்டைகள், கொட்டு 58 மூட்டைகள் என மொத்தம் 2,698 மூட்டைகளை ஏலத்துக்கு கொண்டு வந்திருந்தனா்.
இதில் ஆா்.சி.எச். ரகம் குறைந்தபட்சமாக குவிண்டால் ரூ. 7,569 முதல் அதிகபட்சமாக ரூ.8,444-க்கு விற்பனையானது. டி.சி.எச். ரகம் குறைந்தபட்சமாக ரூ.7,869 முதல் அதிகபட்சமாக குவிண்டால் ரூ.8,650 க்கு-விற்பனையானது. கொட்டு குறைந்தபட்சம் குவிண்டால் ரூ.5,390 முதல் அதிகபட்சமாக குவிண்டால் ரூ. 6,669 க்கும் ஏலம் மூலம் விற்பனையானது. மொத்தம் ரூ. 77 லட்சத்துக்கு பருத்தி வா்த்தகம் நடைபெற்றது.