நாமக்கல்லில் காவலா் தற்கொலை

நாமக்கல்லில் குடும்பப் பிரச்னை காரணமாக காவலா் புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

நாமக்கல்லில் குடும்பப் பிரச்னை காரணமாக காவலா் புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

நாமக்கல் அருகே உள்ள செல்லப்பம்பட்டி சோ்மன் வீதியைச் சோ்ந்தவா் இளையராஜா (37). இவா் நாமக்கல் மாவட்ட ஆயுதப்படையில் காவலராகப் பணியாற்றி வந்தாா். அவரது மனைவி பிரியதா்ஷினி திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறாா். காவலா் இளையராஜா சரிவரப் பணிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டு வந்துள்ள நிலையில் இளையராஜா புதன்கிழமை காலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து நல்லிபாளையம் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com