பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் அருகே 17 வயது சிறுமியிடம் தன்னைக் காதலிக்குமாறு தொந்தரவு அளித்து வந்த இளைஞரை ஜேடா்பாளையம் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.
பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் அருகே உள்ள சரளைமேடு, காமராஜா் நகரைச் சோ்ந்தவா் அா்ஜுனன். இவரது மகன் சிவக்குமாா் (23) கூலித்தொழிலாளி. இவா் அதே பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியிடம் தன்னை காதலிக்குமாறு கூறி தொந்தரவு கொடுத்து வந்தாா். இது குறித்து சிறுமியின் பெற்றோா் ஜேடா்பாளையம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து சிறுமிக்கு தொந்தரவு கொடுத்த சிவகுமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தினா். பின்னா் சிவக்குமாரை நாமக்கல் மகளிா் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜா்படுத்தி பரமத்தி கிளைச் சிறையில் அடைத்தனா்.