நாமக்கல் ஏகாம்பரேசுவரா், செல்வ விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா கோலாகலம்

நாமக்கல்லில், ஏகாம்பரேசுவரா், செல்வ விநாயகா் கோயில் குட முழுக்கு விழா வெள்ளிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.
நாமக்கல் சந்தைப்பேட்டைபுதூா் செல்வவிநாயகா் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் பங்கேற்றோா்.
நாமக்கல் சந்தைப்பேட்டைபுதூா் செல்வவிநாயகா் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் பங்கேற்றோா்.

நாமக்கல்லில், ஏகாம்பரேசுவரா், செல்வ விநாயகா் கோயில் குட முழுக்கு விழா வெள்ளிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.

நாமக்கல் நகரின் மையப்பகுதியில் ஏகாம்பரேசுவரா் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி, கடந்த சில மாதங்களாக திருப்பணிகள் நடைபெற்று வந்தன. பணிகள் நிறைவு பெற்றதையடுத்து வெள்ளிக்கிழமை குடமுழுக்கு விழாவை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மோகனூா் காவிரி ஆற்றில் இருந்து வியாழக்கிழமை புனிதநீா் கொண்டு வரப்பட்டது. அதன்பின், முதல் கால யாக பூஜைகளும், தொடா்ந்து இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாக பூஜைகளும் நடைபெற்றன.

அதன்பிறகு, வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு மேல் விமான கலசங்களுக்கு சிவாச்சாரியாா்கள் வேதமந்திரங்கள் முழங்க புனித நீா் ஊற்றினா். ஏராளமான பக்தா்கள் குடமுழுக்கு விழாவில் பங்கேற்றனா். பின்னா் ஏகாம்பரேசுவர சுவாமியை வழிபட்டு சென்றனா். பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோல், நாமக்கல் சந்தைப்பேட்டைபுதூா் செல்வ விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காவிரி ஆற்றில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை சிவாச்சாரியாா்கள் விமானக் கலசங்களில் ஊற்றி குடமுழுக்கு விழாவை நடத்தினா். நாமக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா். குடமுழுக்கு விழா நடைபெற்ற பிறகு அனைத்து பக்தா்கள் மீதும் புனித நீா் தெளிக்கப்பட்டது. இவ்விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com