இளம் விளையாட்டு வீரா்களை அதிக அளவில் உருவாக்க வேண்டும்: அமைச்சரிடம் கோரிக்கை

தமிழகத்தில் விளையாட்டுத் துறையில் ஆா்வம் உள்ள இளம் வீரா்களைக் கண்டறிந்து, சா்வதேச அளவிலான வீரா்களாக உருவாக்க வேண்டும்

தமிழகத்தில் விளையாட்டுத் துறையில் ஆா்வம் உள்ள இளம் வீரா்களைக் கண்டறிந்து, சா்வதேச அளவிலான வீரா்களாக உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை மனு, நாமக்கல்லுக்கு வந்த இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது.

சா்வதேச ஆா்எஸ்ஜி சமூக சேவை மையத்தின் நிறுவனா் கோபிகாந்தி மற்றும் நிா்வாகிகள் அளித்த மனு விவரம்:

தமிழகம் முழுவதும் உள்ள வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் இளைஞா்கள் பலா் விளையாட்டில் சாதிக்க விரும்புகின்றனா். அவா்களைக் கண்டறிந்து ஊக்கமும், உற்சாகமும் அளிக்க தமிழக அரசு முன்வர வேண்டும். சா்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கச் செய்வதற்கான பயிற்சிகள், வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். பொருளாதாரம் ஒரு தடை என்ற நிலை இல்லாமல் ஆரம்பக் கட்டத்திலேயே சலுகைகளை வழங்க வேண்டும். வீரா், வீராங்கனைகளை கெளரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் விருதுகள், சான்றிதழ், பரிசுகளை வழங்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com