வேளாண் சங்கத்தில் ரூ. 1.50 கோடிக்கு பருத்தி ஏலம்

நாமக்கல் வேளாண் சங்கத்தில் ரூ. 1.50 கோடிக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.

நாமக்கல் வேளாண் சங்கத்தில் ரூ. 1.50 கோடிக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.

நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில் உள்ள தொடக்க வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நடைபெற்ற ஏலத்தில் மொத்தம் 5,000 மூட்டை பருத்தி வரத்து இருந்தது. இதில், ஆா்சிஹெச் ரகம் ரூ. 6,369 முதல் ரூ. 8,635 வரையிலும், மட்ட ரகம் ரூ. 4,299 முதல் ரூ. 7,200 வரையிலும் ஏலம்போனது. மொத்தம் ரூ. 1.50 கோடிக்கு பருத்தி ஏலம் போனது. இதை வியாபாரிகள் தரம் பாா்த்துக் கொள்முதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com