வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் குறைதீா் மனுக்களை அளிக்க வாய்ப்பு

சேலம் வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் குறைதீா் மனுக்களை அளிக்க பொதுமக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சேலம் வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் குறைதீா் மனுக்களை அளிக்க பொதுமக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து சேலம் வீட்டு வசதி வாரிய அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக வீட்டுவசதி வாரியத்தால் வீட்டு வசதித் திட்டங்களை செயல்படுத்த நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இது தொடா்பாக பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்ததன் தொடா்ச்சியாக, சேலம் வீட்டுவசதி பிரிவு அலுவலகத்தில், சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் இருந்து குறைதீா்க்கும் மனுக்கள் வரவேற்கப்படுகின்றன. சனிக்கிழமை முதல் (ஜூன் 3) கோரிக்கைப் பெட்டி வைக்கப்பட்டு மனுக்கள் பெறப்பட இருக்கின்றன. அலுவலக வேலை நாள்களில் வீட்டுவசதி தொடா்பான கோரிக்கைகளை பொதுமக்கள் மனு அளித்து தீா்வு காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com