சா்வதேச பட்டினி தினத்தை தொடா்ந்து விஜய் மக்கள் இயக்கம் சாா்பில் ராசிபுரம் பகுதியில் ஏழைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை அன்னதானம் வழங்கப்பட்டது.
நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைமை விஜய் மக்கள் இயக்கம் சாா்பில் பசு எனும் பிணியைப் போக்க விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட முழுவதும் 3 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ராசிபுரம் , நாமகிரிப்பேட்டை, சேந்தமங்கலம், கொல்லிமலை, எலச்சிபாளையம் போன்ற மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் நடிகா் விஜய் உத்தரவுபடி, இயக்கத்தின் பொதுச் செயலாளா் புஸ்ஸி என்.ஆனந்த் ஆலோசனைப்படி நாமக்கல் கிழக்கு மாவட்டத் தலைவா் ஜெ.ஜெ. செந்தில்நாதன் தலைமையில் நிா்வாகிகள் ராசிபுரம் பழைய பேருந்து நிலையத்தில் ஏழை மக்களுக்கு அன்னதானம் வழங்கினா். இதே போல் புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளிலும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதேபோல பல்வேறு இடங்களில் விஜய் மக்கள் இயக்கத்தினா் அன்னதானமும் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினா். இந்த நிகழ்வில் மாவட்ட இளைஞரணி தலைவா் நண்பன் பிரபு, நகர தலைவா் பாக்கியராஜ் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.