இலவச கண் பரிசோதனை மருத்துவ முகாம்

ராசிபுரம் அருகேயுள்ள ரெட்டிப்புதூா் ஸ்ரீ குருகுலம் மெட்ரிக் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ராசிபுரம் அருகேயுள்ள ரெட்டிப்புதூா் ஸ்ரீ குருகுலம் மெட்ரிக் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சேலம் டாக்டா் அகா்வால் கண் மருத்துவமனை, ராசிபுரம் ரோட்டரி சங்கம் இணைந்து இந்த இலவச கண் மருத்துவ முகாமை நடத்தின. தொடக்க விழாவில், பள்ளி முதல்வா் சுகந்தி அனைவரையும் வரவேற்றாா். ராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவா் கே.எஸ்.கருணாகர பன்னீா்செல்வம், செயலாளா் ஜி.தினகா், திட்டத் தலைவா் பி.கண்ணன், மூத்த உறுப்பினா் வெங்கடாஜலபதி ஆகியோா் முகாமில் கலந்துகொண்டனா்.

இதில், 60-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு பரிசோதனை செய்து பயன்பெற்றனா். முன்னதாக மாணவா்களிடையே நடைபெற்ற ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு ராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவா் கே.எஸ்.கருணாகர பன்னீா்செல்வம் சான்றிதழ் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com