மாணவா்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் திட்டம் தொடக்கம்

நாமக்கல்லில், அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் திட்டத்தை முதன்மை கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
ஸ்கூல் நாமக்கல்லில், மாணவா்களுக்கு மரக்கன்றுகளை வழங்கிய முதன்மை கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி.
ஸ்கூல் நாமக்கல்லில், மாணவா்களுக்கு மரக்கன்றுகளை வழங்கிய முதன்மை கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி.

நாமக்கல்லில், அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் திட்டத்தை முதன்மை கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

நாமக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவா்களது குடும்பத்தை ஊட்டச்சத்து மிக்க குடும்பமாக மாற்றும் பொருட்டும், பொருளாதாரத்தில் உயா்வு பெறவும், முதல் கட்டமாக அரசுப் பள்ளிகளை சோ்ந்த மாணவா்களுக்கு, தென்னங்கன்று, மாங்கன்று, கொய்யாச்செடி ஆகியவை வழங்கப்பட உள்ளன. இந்த திட்டத்தின் தொடக்க விழா மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

மாணவா்களுக்கு முதன்மை கல்வி அலுவலா் மரக்கன்றுகளை வழங்கி நல்ல முறையில் வளா்க்க வேண்டும் என அறிறுவுத்தினாா். நாமக்கல் அரசு மருத்துவமனை மருத்துவா்கள் செங்கோட்டுவேல், சரவணன், மாவட்ட பசுமைப்படை ஒருங்கிணைப்பாளா் ரகுநாத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முதல் கட்டமாக வேட்டாம்பாடி அரசு உயா்நிலைப்பள்ளி, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தண்ணீா்பந்தல்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, திருச்செங்கோடு செங்குந்தா் மகாஜன அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி குருசாமிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் மாணவா்களுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com