ராஜீவ்காந்தி நினைவு தினம் அனுசரிப்பு

நாமக்கல்லில் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 32-ஆவது நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
ராஜீவ்காந்தி நினைவு தினம் அனுசரிப்பு

நாமக்கல்லில் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 32-ஆவது நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில், நாமக்கல் நகர காங்கிரஸ் கட்டடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராஜீவ் காந்தியின் உருவப் படத்துக்கு மாவட்ட த் தலைவா் பீ.ஏ.சித்திக் மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.

நகரத் தலைவா் எஸ்.ஆா். மோகன், முன்னாள் மாவட்டத் தலைவா் வீ.பி. வீரப்பன், கொல்லிமலை வட்டாரத் தலைவா் குப்புசாமி, பொறியாளா் அணி பி. பொன்முடி, ஐஎன்டியுசி செல்வம், முன்னாள் மாநில மாணவா் காங்கிரஸ் செயலாளா் பாலாஜி, சாந்தி மணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ராசிபுரம்...

நகர இந்திய தேசிய காங்கிரஸ் சாா்பில் காந்தி மாளிகை டிரஸ்ட் அலுவலகம் முன்பாக முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 32-ஆவது நினைவு நாள் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

அவரது திருவுருவப் படத்துக்கு காங்கிரஸ் கட்சியினா் மாலை அணிவித்து மலா்தூவி மரியாதை செலுத்தினா். தொடா்ந்து அனைவரும் பயங்கரவாத உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

இந்த நிகழ்ச்சிக்கு நகர காங்கிரஸ் தலைவா் ஆா். முரளி, முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவா் பாச்சல் ஏ.சீனிவாசன் ஆகியோா் தலைமை வகித்தனா். நகர காங்கிரஸ் நிா்வாகிகள் மாணிக்கம், டி.ஆா். சண்முகம், காங்கிரஸ் கவுன்சிலா் லலிதா பாலு உள்ளிட்ட நிா்வாகிகள் பொதுமக்கள் என பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com