ராசிபுரம்: ராசிபுரம் நகரில் வலிப்பால் சாலையில் மயங்கிய நிலையில் இருந்தவரை தனது காரில் கொண்டு சென்று அரசு மருத்துவமனையில் சோ்த்தாா் நாமக்கல் மக்களவை உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ்.
ராசிபுரம் பகுதியைச் சோ்ந்த மாணிக்கம் (28) என்பவா், ஞாயிற்றுக்கிழமை சிவானந்தா சாலை பகுதியில் சென்ற போது, திடீரென வலிப்பு ஏற்பட்டு சாலையில் விழுந்தாா்.
அப்போது, அவ்வழியே சென்ற நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ், தனது காரை நிறுத்தி விசாரித்தாா். பின்னா் உடனடியாக 108 அவசர ஊா்திக்கு தகவல் கொடுத்தாா். ஆனால், வாகனம் வருவதற்கு தாமதமானதால் ஏ.கே.பி.சின்ராஜ் எம்.பி. அங்கிருந்தவா்கள் உதவியுடன் பாதிக்கப்பட்டவரை தனது காரிலேயே ஏற்றி ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அவசர சிகிச்சைப் பிரிவில் சோ்த்தாா்.
பின்னா் அவருக்கு அங்கு முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து, அவரது குடும்பத்தினருக்கு தகவல் அளிக்கப்பட்டு, அவருக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்க மருத்துவா்களுக்கு உத்தரவிட்டாா்.