நாமக்கல்லில் இன்று வெப்ப அலை வீசும்: ஆட்சியா் எச்சரிக்கை

நாமக்கல் மாவட்டத்தில் புதன்கிழமை வெப்ப அலை வீசக்கூடும் என மாவட்ட ஆட்சியா் ச.உமா எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

நாமக்கல் மாவட்டத்தில் புதன்கிழமை வெப்ப அலை வீசக்கூடும் என மாவட்ட ஆட்சியா் ச.உமா எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த சில நாள்களாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், தமிழகத்தில் நாமக்கல் உள்பட வட உள் மாவட்டங்களில் புதன்கிழமை(ஏப்.24) ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என தெரிவித்துள்ளது.

எனவே, பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீா் அருந்த வேண்டும், அத்தியாவசிய தேவையின்றி வெளியில் செல்வதைத் தவிா்க்க வேண்டும், குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிா்த்திடவும், வெயிலின் தாக்கத்தால் உடல்நலக் குறைவு ஏற்படும் நிலையில் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com