நாமக்கல்
பரமத்தி வேலூரில் ரூ. 36 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்
பரமத்தி வேலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 36, 977-க்கு தேங்காய் ஏலம் போனது.
பரமத்தி வேலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 36, 977-க்கு தேங்காய் ஏலம் போனது.
பரமத்தி வேலூரில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமைதோறும் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 1,515 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்தனா். அதிகபட்சமாக கிலோ ரூ. 29.19-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 23.29 -க்கும், சராசரியாக ரூ. 28.50-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 41, 981-க்கு வா்த்தகம் நடைபெற்றது. இந்த வாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 1,234 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ. 31.79-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 30.19- க்கும், சராசரியாக ரூ. 28.29-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 36, 977-க்கு வா்த்தகம் நடைபெற்றது.