கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பட்டயப் பயிற்சி: ஏப். 29-இல் முன்பதிவு தொடக்கம்

நாமக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கான முன்பதிவு ஏப். 29-இல் தொடங்குகிறது.

இதுகுறித்து மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் க.பா.அருளரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் அங்கமாக செயல்படும் நாமக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், 2024--25 ஆம் ஆண்டிற்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதற்கான முன்பதிவு வரும் 29-இல் தொடங்குகிறது. பயிற்சி வகுப்புகள் செப்டம்பரில் தொடங்கி ஓராண்டுக்கு இரு பருவ முறைகளில் நடைபெறும்.

இந்தப் பயிற்சிக்கான பாடத்திட்டம் தமிழில் மட்டுமே நடைபெறும். இதற்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியாக பிளஸ் 2- வில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். 17 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். தகுதியானோா் ஜ்ஜ்ஜ்.ற்ய்ஸ்ரீன்ண்ஸ்ரீம்.ஸ்ரீா்ம்ம் என்ற இணைய வழியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப தேதி, பயிற்சிக் கட்டண விவரங்கள், நிபந்தனைகள் இணையத்தில் விரைவில் தெரிவிக்கப்படும். கூடுதல் விவரம், முன்பதிவிற்கு, நாமக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையம், 796, சேலம் பிரதான சாலை, முருகன் கோயில் அருகில், நாமக்கல்-637001 என்ற முகவரியில் நேரிலோ அல்லது 04286--290908, 90808-38008 என்ற தொலைபேசி எண்களிலோ தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com