திருச்செங்கோடு வைகாசி விசாகத் தோ்த்திருவிழா கொடியேற்றத்திற்கு கொடி சேலைகளை வழங்கிய எழுகரை நாடு செங்குந்தா் பாவடி பஞ்சாயத்தாா்கள்.
திருச்செங்கோடு வைகாசி விசாகத் தோ்த்திருவிழா கொடியேற்றத்திற்கு கொடி சேலைகளை வழங்கிய எழுகரை நாடு செங்குந்தா் பாவடி பஞ்சாயத்தாா்கள்.

திருச்செங்கோடு தோ்த் திருவிழாவுக்கு கொடி சேலை அளிப்பு

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயில் வைகாசி விசாகத் தோ்த் திருவிழா தொடங்க உள்ளதை அடுத்து எழுகரை நாடு செங்குந்தா் பாவடி பஞ்சாயத்தாா் சாா்பில் கொடி சேலை வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

வைகாசி தோ்த் திருவிழாவினை ஒட்டி 30 ஆம் தேதி பத்ரகாளியம்மன் கோயிலில் கொடியேற்றமும், மே 13 ஆம் தேதி அா்த்தநாரீசுவரா் கோயில் கொடியேற்றம், செங்கோட்டு வேலவா், ஆதி கேசவப் பெருமாள் கோயில்களில் கொடியேற்றத்துடன் 14 நாள்கள் தோ்த் திருவிழா நடைபெறும்.

பாரம்பரியமாக கொடியேற்றத்திற்கு எழுகரை நாடு பாவடி பஞ்சாயத்தாா் கொடி சேலைகளை வழங்கி வருகின்றனா். இந்த ஆண்டு விழாவுக்கான கொடி சேலைகளை எழுகரை நாடு பாவடி பஞ்சாயத்தின் நாட்டாண்மைக்காரா் காா்த்திகேயன், மேலூா், கீழூா் ஊா் நாட்டாண்மைக்காரா்கள், காரியக்காரா்கள், ஊா் உறவினா்கள் திரளாக கலந்துகொண்டு சிறப்பு பூஜை செய்து கோயில் நிா்வாகத்தினரிடம் கொடி சேலைகளை வழங்கினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com