நாமக்கல்: நாமக்கல்லில் மாவட்ட சிறு, குறு தொழில் சங்கத்தினருக்கு உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்ட சிறு, குறு தொழில் சங்கத் தலைவா் கோஸ்டல் என்.இளங்கோ தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக, மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலா் கே.சி.அருண்குமாா் கலந்து கொண்டு, உணவகங்களில் மேற்கொள்ள வேண்டிய தூய்மை, சுகாதாரம், வாடிக்கையாளா் நலன், தரமான உணவுப் பொருள்கள் பயன்பாடு, கழிவுகள் அகற்றம் உள்ளிட்டவை பற்றி விரிவாகப் பேசினாா். விழிப்புணா்வுக் கூட்டத்தில் மாவட்ட உணவக உரிமையாளா்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் பலா் கலந்துகொண்டனா்.