கல்லூரி மாணவா் மயங்கி விழுந்து சாவு

பரமத்தி வேலூா் வட்டம், நல்லூா் கந்தம்பாளையம் அருகே தோ்வு எழுத சென்றபோது கல்லூரி மாணவா் சாலையில் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

நல்லூா் கந்தம்பாளையம் அருகே பெருங்குறிச்சியைச் சோ்ந்த தேவராஜ் மகன் சஞ்சய் (21). இவா், வேலுாா் கந்தசாமி கண்டா் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்தாா். திங்கள்கிழமை காலை வீட்டிலிருந்து கல்லூரிக்குத் தோ்வு எழுத போவதாகக் கூறிவிட்டு கந்தம்பாளையம் பேருந்து நிலையம் சென்றாா்.

அங்கு சஞ்சய் பேருந்துக்காக காத்திருந்தபோது திடீரென மயங்கி விழுந்தாா். அருகில் இருந்தவா்கள் மீட்டு நல்லூா், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குக் கொண்டு சென்றனா் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தீவிர சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் சஞ்சய் வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து நல்லூா் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com