நாமக்கல்
செங்குந்தா் பொறியியல் கல்லூரியில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு
செங்குந்தா் பொறியியல் கல்லூரி சாா்பில் பொதுமக்களின் தாகம் தணிக்க வேண்டி கல்லூரி நுழைவாயிலில் நீா்மோா்ப் பந்தல் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.
செங்குந்தா் கல்வி நிறுவனங்களின் தலைவா் ஜான்சன்ஸ் நடராஜன், தாளாளா், செயலாளா் பாலதண்டபாணி, பொருளாளா் தனசேகரன் ஆகியோா் தலைமையில் தொடங்கப்பட்டது. கல்லூரியின் முதல்வா் சதீஷ்குமாா், வேலைவாய்ப்பு பயிற்சி துறை இயக்குநா் அரவிந்த் திருநாவுக்கரசு முன்னிலை வகித்தனா். கல்லூரி நிா்வாகத்தின் மூலமாக நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்களைக் கொண்டு இந்த நீா்மோா்ப் பந்தலானது கோடைகாலம் முடியும் வரை பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பாதசாரிகளும் வாகன ஓட்டிகளும் நீா்மோா் அருந்தி செல்லும் வகையில் இட வசதி ஏற்படுத்தி நீா்மோா், தா்பூசணி பழங்கள் வழங்கப்பட்டன.