பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி: நாமக்கல்லில் மூன்று மையங்களில் தொடக்கம்

நாமக்கல் மாவட்டத்தில் மூன்று மையங்களில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி திங்கள்கிழமை (ஏப்.1) தொடங்குகிறது. தமிழகம் முழுவதும் மாா்ச் 1-இல் தொடங்கி 22-ஆம் தேதி வரை நடைபெற்ற பிளஸ்-2 பொதுத்தோ்வை 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதினா்.

நாமக்கல் மாவட்டத்தில் 197 அரசு, தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 8,479 மாணவா்கள், 8,932 மாணவியா் என மொத்தம் 17,411 போ் எழுதினா். தனித் தோ்வா்கள் 286 போ் பங்கேற்றனா். பிளஸ் 2 விடைத்தாள் திருத்துவதற்காக, நாமக்கல் ஜெய்விகாஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ராசிபுரம் வித்யாமந்திா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகிய மூன்று மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இம்மையங்களில் திங்கள்கிழமை (ஏப். 1) முதல் விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்குகிறது. இப் பணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள் ஈடுபடுகின்றனா். மூன்று மையங்களிலும் தினமும் ஒவ்வொரு பாடத்திலும் சுமாா் 10 ஆயிரம் விடைத்தாள்கள் திருத்தி மதிப்பீடு செய்யப்படவுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com