நாமக்கல்
விவசாய தொழிலாளி கொலை
விவசாய தொழிலாளி அத்தனூா் ரயில்வே மேம்பாலத்தில் அடியில் உடலில் கத்தியால் பல இடங்களில் குத்தப்பட்டு இறந்து கிடந்தாா்.
இதுகுறித்து பொதுமக்கள் வெண்ணந்தூா் காவல் நிலையத்துக்கு அளித்த தகவலின்பேரில், ராசிபுரம் டிஎஸ்பி. விஜயகுமாா், வெண்ணந்தூா் காவல் ஆய்வாளா் கே. சுகவனம் உள்பட போலீஸாா் வியாழக்கிழமை நேரில் சென்று விசாரணை நடத்தினா். அவரது உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பழனிவேல் எதற்காக கொலை செய்யப்பட்டாா் என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். பழனிவேலுக்கு மனைவி செல்வி (35), மகன் விமல் (15) ஆகியோா் உள்ளனா்.