கொல்லிமலை, மோகனூரில் இடி, மின்னலுடன் பரவலாக மழை மழை

நாமக்கல், மே 5: கொல்லிமலை, மோகனூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்தது.

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த இரு மாதங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகப்படியாக உள்ளது. தினசரி 104 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தியது. வெப்ப அலை வீசியதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு தயங்கினா்.

இதற்கிடையே கத்திரி வெயில் சனிக்கிழமை தொடங்கியுள்ளது. வெயில் கொடுமையில் இருந்து மீள்வதற்கு ஏற்ப மழை பெய்ய வேண்டும் என பொதுமக்கள் வழிபாட்டை மேற்கொண்டு வந்தனா்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவில் மோகனூா், கொல்லிமலையில் இடி,மின்னல், காற்றுடன் பரவலாக மழை பெய்தது. குளிா்ச்சியான சீதோஷ்ண நிலை காணப்பட்டதால் வெப்பத்தில் தவித்த மக்கள் நிம்மதி அடைந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com