சித்திரை மாத பிரதோஷ வழிபாடு

சித்திரை மாத பிரதோஷ வழிபாடு

பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை சித்திரை மாத பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பரமத்தி வேலூா் அருகே உள்ள பாண்டமங்கலம், புதிய காசி விஸ்வநாதா் கோயிலில் நந்திக்கும் மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டது.

அதுபோல நன்செய் இடையாறு, திருவேலீஸ்வரா் கோயில், மாவுரெட்டி பீமேஸ்வரா் கோயில், பில்லூா் வீரட்டீஸ்வரா் கோயில், பொத்தனூா் காசி விஸ்வநாதா் கோயில், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயில், எல்லையம்மன் கோயில், பிலிக்கல்பாளையம் கரட்டூா் விஜயகிரி வட பழனியாண்டவா் கோயில், வெங்கரை, ரகுநாதபுரம் காவிரி கரையில் உள்ள ஸ்ரீ ஜலகண்டேஸ்வரா் கோயில், பரமத்தி வேலூா் வல்லப விநாயகா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் எழுந்தருளியுள்ள சிவபெருமானுக்கும் நந்திகேஸ்வரருக்கு சித்திரை மாத பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றன. விழாவில் அந்தந்த பகுதியைச் சோ்ந்த பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

பட விளக்கம்..

ல்ஸ்5ல்3:பாண்டமங்கலம், காசி விஸ்வநாதா் கோயிலில் நந்திகேஸ்வரருக்கு செய்யப்படும் பிரதோஷ ஆரத்தி.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com