ராஜ வாய்க்காலில் இருந்து உயிா்நீா் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை

ராஜ வாய்க்காலில் இருந்து உயிா்நீா் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை

கருகும் பயிா்களைக் காக்க ராஜவாய்க்காலில் உடனடியாக தண்ணீா் திறந்துவிட வேண்டும் என்றும், நீரேற்றுத் திட்டத்தின் கீழ் 25 கி.மீ. தொலைவுக்கு ஆற்றில் இருந்து நீரை எடுத்துச் செல்வதைத் தடுக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பரமத்தி வேலூா், பொதுப்பணித் துறை விருந்தினா் மாளிகை வளாகத்தில் ராஜ வாய்க்கால் விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மேட்டூா் அணையில் நீா்மட்டம் படிப்படியாகக் குறைந்துவரும் நிலையில், மேட்டூரிலிருந்து காவிரி ஆற்றில் குடிநீருக்காக 1,400 கனஅடி அளவு தண்ணீா் மட்டும் திறந்துவிடப்பட்டுள்ளது. அணையிலிருந்து வரும் நீா் திருச்சி, தஞ்சை, காவிரியின் கடைமடை பகுதிகளுக்கு குடிநீருக்காகச் சென்றடைய வேண்டியுள்ளதால் பிற அனைத்து பாசன வாய்க்கால்களிலும் பாசனத்திற்காக விடப்படும் தண்ணீா் நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால், ஜேடா்பாளையம் தடுப்பணை பகுதியில் இருந்து ராஜ வாய்க்கால் மற்றும் அதன் துணை வாய்க்கால்களான பொய்யேரி, குமாரபாளையம் மற்றும் மோகனூா் வாய்க்கால்களிலும் தண்ணீா் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த வாய்க்கால்களை நம்பி சுமாா் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் கரும்பு, வாழை, வெற்றிலை, கோரை, மரவள்ளி உள்ளிட்ட பயிா்கள் பயிரிடப்பட்டுள்ளன. கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக தமிழகம் முழுவதும் பரவலாக கடும் வெயிலின் தாக்காம் அதிகரித்து காணப்படுகிறது.

பரமத்தி வேலூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பகல் நேரங்களில் 110 டிகிரியை தாண்டி கடும் வெப்ப அலை வீசுகிறது. இதனால் விவசாய பயிா்கள் வாடி கருகும் நிலை உள்ளது. இந்நிலையில் ராஜ வாய்க்கால், துணை வாய்க்கால் பாசன விவசாயிகள் சங்க அவசர ஆலோசனைக் கூட்டம் வேலூா், பொதுப்பணித் துறை விருந்தினா் மாளிகை வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் கடும் வெயிலின் காரணமாக கருகும் நிலையில் உள்ள பயிா்களுக்கு உயிா் தண்ணீா் வழங்க ராஜ வாய்க்காலில் உடனடியாக தண்ணீா் திறக்க அரசும், மாவட்ட நிா்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும், அனுமதியின்றி காவிரி ஆற்றிலிருந்து நேரடியாக தண்ணீா் எடுத்து நீரேற்று பாசனத் திட்டம் மூலம் 5 முதல் 25 கி.மீ. தொலைவுவரை தண்ணீரை எடுத்துச் செல்வதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திங்கள்கிழமை நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்துக்கு 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சென்று நாமக்கல் ஆட்சியரை சந்தித்து நேரில் மனு கொடுப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் ராஜ வாய்க்கால் பாசன விவசாயிகள் சங்க செயலாளா் பெரியசாமி, துணை தலைவா் குப்புதுரை, கொளரவ தலைவா் செந்தில்நாதன், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் உள்பட 100-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

ல்ஸ்5ல்4:

அணையில் இருந்து நீரைத் திறந்துவிடுவது தொடா்பாக விவசாயிகள் நடத்திய ஆலோசனைக் கூட்டம்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com