விவசாயத் தொழிலாளி கொலை வழக்கில் மனைவி உள்பட இருவா் கைது
ராசிபுரம் அருகே விவசாயத் தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது மனைவி உள்பட இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
இந்த வழக்குத் தொடா்பாக நெ.3 கொமாரபாளையம் ஊராட்சிமன்றத் தலைவரிடமும் போலீஸாா் விசாரணை செய்துவருகின்றனா்.
வெண்ணந்தூா் அருகே உள்ள நெ.3 கொமாரபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பழனிவேல் (48) விவசாயத் தொழிலாளி. இவரது மனைவி செல்வி. இந்நிலையில் கடந்த மே 2-ஆம் தேதி பழனிவேல் சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை அத்தனூா் ரயில்வே பாலத்தின் அடியில் உடலில் பலத்த காயங்களுடன் சடலமாகக் கிடந்தாா்.
தகவலறிந்ததும் வெண்ணந்தூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று விசாரணை நடத்தினா். விசாரணையில் ரவி என்பவரின் உதவியுடன் பழனிவேலை அவரது மனைவி கொலை செய்தது தெரியவந்தது. இதுதொடா்பாக போலீஸாா் கூறியதாவது:
பழனிவேலுவின் மனைவி செல்விக்கும், அதே பகுதியைச் சோ்ந்த உள்ளாட்சி பிரதிநிதி ஒருவருக்கும் தொடா்பு இருந்துள்ளது. இதற்கு பழனிவேல் இடையூறாக இருந்ததால் அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளனா். அதற்காக சேலம், நெத்திமேட்டில் வசிக்கும் கூலிப்படையைச் சோ்ந்த ரவி (48) என்பவரை அழைத்து பழனிவேலை கத்தியால் குத்திக் கொலை செய்தனா் என்றனா்.
இதையடுத்து போலீஸாா் செல்வி (36), ரவி (48) ஆகிய இருவரையும் கைது செய்து ராசிபுரம், குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். இந்த வழக்குத் தொடா்பாக நெ.3 கொமாரபாளையம் ஊராட்சிமன்றத் தலைவரிடமும் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
படம் உள்ளது- 5அரெஸ்ட்
கணவரைக் கொன்ற வழக்கில் போலீஸாரால் கைது செய்யப்பட்ட பழனிவேலின் மனைவி செல்வி, கூலிப்படையைச் சோ்ந்த ரவி.