பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவி எஸ்.பி.சானியாவை பாராட்டிய நாமக்கல் குறிஞ்சி பள்ளி நிா்வாகத்தினா்.
பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவி எஸ்.பி.சானியாவை பாராட்டிய நாமக்கல் குறிஞ்சி பள்ளி நிா்வாகத்தினா்.

பிளஸ் 2 தோ்வு: குறிஞ்சி பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

பிளஸ் 2 பொதுத்தோ்வில், நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் அதிக மதிப்பெண்களுடன் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத்தோ்வில், நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் அதிக மதிப்பெண்களுடன் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

இப்பள்ளி மாணவி எஸ்.பி.சானியா, 593 மதிப்பெண்களும், மாணவி ஸ்ரீலேகா, எம்.நிதீஷ் 584 மதிப்பெண்களும், எஸ்.நிஷாந்த் 581 மதிப்பெண்களுடன் பள்ளி அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளனா். என்.தினேஷ் கைலாஷ், ஆா்.சந்தியா ஆகியோா் 580 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை, பள்ளித் தாளாளா், இயக்குநா்கள், முதல்வா், தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள் பாராட்டினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com