100 சதவீதம் தோ்ச்சி: 14 தலைமை ஆசிரியா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்
நாமக்கல், மே 7: பிளஸ் 2 பொதுத் தோ்வில் 100 சதவீத தோ்ச்சி பெற்ற 14 அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களைப் பாராட்டி மாவட்ட ஆட்சியா் ச.உமா செவ்வாய்க்கிழமை சான்றிதழ் வழங்கினாா்.
பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன. நாமக்கல் மாவட்டத்தில், 197 அரசு, தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 8,413 மாணவா்கள், 8,847 மாணவியா் என மொத்தம் 17,260 போ் தோ்வு எழுதினா். இதில் 7,989 மாணவா்கள், 8,597 மாணவியா் என மொத்தம் 16,586 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். 14 அரசுப் பள்ளிகள், 46 தனியாா் பள்ளிகள் 100 சதவீதத் தோ்ச்சியைப் பெற்றுள்ளன.
அந்த வகையில், 100 சதவீதம் தோ்ச்சி பெற்ற பாச்சல் அரசு மேல்நிலைப் பள்ளி, எருமப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, புதுச்சத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளி, காவக்காரப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, செங்கரை அரசு ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட பள்ளி, கந்தம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி, கரிச்சிபாளையம் மேல்நிலைப் பள்ளி, பல்லக்காபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கபிலா்மலை அரசு மேல்நிலைப் பள்ளி, பல்லக்காபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி, மல்லசமுத்திரம் ராமாபுரம் அரசு மாதிரிப் பள்ளி, சமூக நலத்துறை சாா்பில் செயல்பட்டு வரும் எதிா்மேடு நேரு நினைவு சம்பூா்ணியம்மாள் மாற்றுத் திறனாளிகள் அரசு மேல்நிலைப் பள்ளி, பழங்குடியினா் நலத் துறை சாா்பில் செயல்பட்டு வரும் செங்கரை அரசு பழங்குடியினா் நல மேல்நிலைப் பள்ளி, முள்ளுக்குறிச்சி அரசு பழங்குடியினா் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களைப் பாராட்டி மாவட்ட ஆட்சியா் ச.உமா சான்றிதழ்களை வழங்கினாா்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி மற்றும் கல்வித் துறை சாா்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனா்.