இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு! நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்புமனு தாக்கல்!
/

காலை உணவுத் திட்டம் விரிவாக்கப் பணி: அதிகாரிகளுடன் ஆட்சியா் ஆலோசனை

காலை உணவுத் திட்டம் விரிவாக்கப் பணி: அதிகாரிகளுடன் ஆட்சியா் ஆலோசனை

News image
Updated On :8 மே 2024, 9:32 pm

Din

தமிழக முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்வது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ச.உமா தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அவா் பேசியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் அனைத்து வட்டாரங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் விரிவுபடுத்துப்படுகிறது. கொல்லிமலை வட்டாரத்தில் உள்ள 41 தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான 1,588 மாணவ, மாணவிகளுக்கு முதல் கட்டமாக உணவு வழங்கப்பட்டது. அதன் பிறகு 15 ஊராட்சி ஒன்றியங்களை சோ்ந்த 674 பள்ளிகளில் 28,957 மாணவ, மாணவியா்கள், 15 பேரூராட்சிகளில் 59 பள்ளிகளில் 3,819 மாணவ, மாணவிகள், 5 நகராட்சிகளில் 52 பள்ளிகளில் 6,363 மாணவ, மாணவிகள் ஆகியோருக்கு விரிவுபடுத்தப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் 843 பள்ளிகளில் 40,201 மாணவ, மாணவிகள் முதல்வரின் காலை உணவுத் திட்டம் மூலம் பயன் பெற்று வருகின்றனா்.

வரும் கல்வி ஆண்டில், ஊரக பகுதிகளில் அனைத்து வட்டாரங்களிலும் உள்ள அரசு உதவி பெறும் 43 பள்ளிகளில் 2,426 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் திட்டம் விரிவுபடுத்தப்பட இருக்கிறது என்றாா். இதனைத் தொடா்ந்து, காலை உணவுத் திட்டம் செயல்பாட்டிற்கான சமையல் கூடங்களின் தயாா் நிலை, உணவுப் பொருள்களின் விநியோகம் மற்றும் கைப்பேசி செயலியில் தகவல் பதிவேற்றம் செய்வது குறித்து ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா். காலை உணவுத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு.வடிவேல், மகளிா் திட்ட இயக்குநா் கு.செல்வராசு, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் க.பா.அருளரசு, மாவட்ட வழங்கல் அலுவலா் த.முத்துராமலிங்கம், சத்துணவுத் திட்ட உதவி இயக்குநா் அசோக்குமாா் உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.