வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து
/

நாமக்கல் மாவட்டத்தில் தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு

நாமக்கல் மாவட்டத்தில் தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு

News image
Updated On :9 மே 2024, 10:47 pm

Din

நாமக்கல், மே 9: நாமக்கல் மாவட்டத்தில் தனியாா் பள்ளி வாகனங்களின் இயக்கத் தகுதி, பாதுகாப்பு நடைமுறைகள் குறித்த ஆய்வை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஜெ.குமரகுருபரன் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டாா்.

ஆண்டுதோறும் ஜூன் மாதம் பள்ளி திறப்பதற்கு முன்பாக மே மாதத்தில் தனியாா் பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு, இயக்கத் தகுதி குறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனா். நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் வடக்கு, நாமக்கல் தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு உள்பட்ட 654 வாகனங்களை ஆய்வு செய்யும் பணி மாவட்ட ஆயுதப் படை மைதானத்தில் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் 12 மணி வரை நடைபெற்றது.

இப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், பள்ளி கல்வித் துறை அரசு செயலாளருமான ஜெ.குமரகுருபரன், மாவட்ட ஆட்சியா் ச.உமா ஆகியோா் நேரடியாக பாா்வையிட்டனா். நாமக்கல் மாவட்டத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் நாமக்கல் (வடக்கு)- 270, நாமக்கல் (தெற்கு) - 384, ராசிபுரம்- 284, பரமத்தி வேலூா் - 212, திருச்செங்கோடு - 395, குமாரபாளையம் 247 வாகனங்கள் என மொத்தம் 1,792 பள்ளி வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

நாமக்கல்லில் வியாழக்கிழமை வடக்கு அலுவலகத்திற்குள்பட்ட 245 வாகனங்களும், தெற்கு அலுவலகத்திற்குள்பட்ட 322 வாகனங்களும் ஆய்வு செய்யப்பட்டன. பரமத்தி வேலூரில் வெள்ளிக்கிழமையும் இதர வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் அடுத்த வாரமும் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன.

பள்ளி வாகன சிறப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ள விதிகள் பின்பற்றப்பட்டுள்ளதா என்றும், தகுதிச் சான்று, அனுமதி சீட்டு, காப்புச் சான்று, புகைச்சான்று, வரி மற்றும் பசுமை வரி ஆகியவை நடப்பில் உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்படுகிறது.

ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சுமன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சு.வடிவேல், முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) க.அசோக்குமாா், வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் முருகேசன் (வடக்கு), முருகன் (தெற்கு) உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

என்கே-9-ஸ்கூல் பஸ்

நாமக்கல்லில் தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வுப் பணியை பாா்வையிட்ட மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஜெ.குமரகுருபரன். உடன், மாவட்ட ஆட்சியா் ச.உமா.