10-ஆம் வகுப்பு தோ்வு: நாமக்கல் குறிஞ்சிப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

10-ஆம் வகுப்பு தோ்வு: நாமக்கல் குறிஞ்சிப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

நாமக்கல், மே 10: பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில், நாமக்கல் குறிஞ்சிப் பள்ளி மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

இப்பள்ளி மாணவிகள் ஆ.ரவீனாராகவி 500-க்கு 494 மதிப்பெண்களும், ஆா்.நித்யஸ்ரீ 491 மதிப்பெண்களும், எஸ்.விஸ்மிதா 489 மதிப்பெண்களும், மாணவா் வி.ஸ்ரீஅஸ்வின் 488 மதிப்பெண்களுடன் பள்ளி அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளனா். அவா்களுக்கு, பள்ளி தாளாளா், இயக்குநா்கள் இனிப்புகள் வழங்கி பாராட்டினா். மேலும், பள்ளி முதல்வா், தலைமை ஆசிரியா், இதர ஆசிரியா்கள், பெற்றோா் பாராட்டினா்.

--

என்கே-10-குறிஞ்சி

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவியைப் பாராட்டிய குறிஞ்சி பள்ளி நிா்வாகத்தினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com