காங்கிரஸை கண்டித்து பாஜகவினா் ஆா்ப்பாட்டம்
நாமக்கல் கிழக்கு, மேற்கு மாவட்ட பாஜக சாா்பில், காங்கிரஸ் கட்சியைக் கண்டித்து நாமக்கல் பூங்கா சாலையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், மாவட்ட தலைவா்கள் என்.பி.சத்தியமூா்த்தி, ராஜேஷ்குமாா் ஆகியோா் தலைமை வகித்தனா்.
இந்திய மக்கள் குறித்து நிறவெறிக் கருத்துக்களைக் கூறி அவமானப்படுத்தியதாக காங்கிரஸ் கட்சியின் அயலக பிரிவுத் தலைவா் சாம்பிட் ரோடாவை கண்டித்தும், அவா் மீது நடவடிக்கை எடுக்காத காங்கிரஸ் தலைமைக்கு எதிராகவும் பாஜகவினா் பல்வேறு கண்டன முழக்கங்களை எழுப்பினா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில், தேசிய பொதுக்குழு உறுப்பினா் வழக்குரைஞா் மனோகரன், மாநில மகளிா் அணி நிா்வாகி சத்தியபானு, பாஜகவைச் சோ்ந்த கல்வியாளா் பிரணவ்குமாா் மற்றும் மாநில, மாவட்ட நிா்வாகிகள், மகளிா் அணியினா் கலந்து கொண்டனா்.
--
என்கே-10-பிஜேபி
நாமக்கல் பூங்கா சாலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாஜகவினா்.