எடப்பாடியில் மாயமான இளம்பெண்கள் மும்பையில் மீட்பு

எடப்பாடி பகுதியில் கடந்த திங்கள்கிழமை மாயமான இரு இளம்பெண்கள் மும்பையில் புதன்கிழமை மீட்கப்பட்டனர்.
Updated on
1 min read

எடப்பாடி பகுதியில் கடந்த திங்கள்கிழமை மாயமான இரு இளம்பெண்கள் மும்பையில் புதன்கிழமை மீட்கப்பட்டனர்.
 எடப்பாடியை அடுத்த கவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்த இரு இளம்பெண்கள் நெருங்கிய தோழிகள். இந்த நிலையில் இருவரும் கடந்த திங்கள்கிழமை கோயிலுக்கு சென்றுவருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றனர். நீண்ட நேரமாகியும் அவர்கள் வீடு திரும்பவில்லை, இதனால் பதற்றமடைந்த பெற்றோர், பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், எடப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
 இந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த எடப்பாடி போலீஸார், இளம்பெண்களின் செல்லிடப்பேசி எண் மூலம் அவர்கள் மும்பையில் இருப்பதைக் கண்டுபிடித்தனர். இதனைத் தொடர்ந்து மும்பையில் குர்லா பகுதியில் வசித்து வரும் பெண்களின் உறவினர்களை தொடர்புகொண்டனர். அப்போது, தோழி ஒருவருக்கு திருமண ஏற்பாடு செய்ததைப் பிடிக்காமல் அவர்கள் மும்பைக்குச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து இரு இளம்பெண்களையும் மும்பையிலிருந்து மீட்டு வருவதற்கான ஏற்பாடுகளை எடப்பாடி போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com