காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து சேலத்தில் ஆட்டோ ஓட்டுநர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
சேலம் மணியனூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு (39). ஆட்டோ ஓட்டுநரான இவர், இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினராக இருந்து வந்தார்.
இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்ற நிர்ணயித்த காலக்கெடு முடிவடைந்த நிலையில், தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம் செய்துவிட்டது.
இதனால் பிரதமர் மோடி தமிழகத்துக்கு வரக் கூடாது என்று சக ஆட்டோ ஓட்டுநர்களிடம் பிரபு கடந்த சில நாள்களாகக் கூறி வந்ததாகத் தெரிய வருகிறது.
இந்த நிலையில், செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலையம் அருகே கடந்த மார்ச் 31 -ஆம் தேதி மாலை ஆட்டோவை நிறுத்தியிருந்த பிரபு, திடீரென காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றும், தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்க என்றும் முழக்கமிட்டப்படி தனது கையில் வைத்திருந்த விஷத்தை அருந்திவிட்டு மயங்கி விழுந்தார். இதைத்தொடர்ந்து அருகில் இருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் பிரபுவை சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை காலை அவர் இறந்தார். இதுபற்றி தகவலறிந்த
சேலம் செவ்வாய்ப்பேட்டை போலீஸார் சடலத்தை மீட்டு விசாரித்தனர்.
இந்த நிலையில், பிரேதப் பரிசோதனை முடிந்த நிலையில் சடலத்தைப் பெற்றுக் கொள்ள மறுத்து அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
மேலும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும், நிவாரண நிதி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். வருவாய்த் துறை அதிகாரிகள் சமரசம் செய்ததைத் தொடர்ந்து, உறவினர்கள் சடலத்தைப் பெற்றுச் சென்றனர்.
இந்த நிலையில், திமுக மத்திய மாவட்டச் செயலரும், வடக்குத் தொகுதி எம்.எல்.ஏ.வுமான வழக்குரைஞர் ஆர்.ராஜேந்திரன் மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட பிரபுக்கு சுமதி என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 9 - நேரலை!
போர்க்களத்தில் தீர்வு கிடைக்காது! உக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியா

இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கான மே.இ.தீவுகள் அணி அறிவிப்பு!

பிழைகளுடன் வெளியான சிங்கப்பெண் அதிரடிப் படை திட்ட முன்னோட்ட விடியோ!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


