வாழப்பாடி அருகே, பள்ளிக்குச் சென்ற எட்டாம் வகுப்பு மாணவி மாயமானது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாழப்பாடியை அடுத்த முத்தம்பட்டி கேட் பகுதியைச் சேர்ந்தவர் மின்வாரிய ஊழியர் சுந்தரராஜன். இவரது 15 வயது மகள், வாழப்பாடியிலுள்ள அரசுப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் திங்கள்கிழமை காலை பள்ளிக்கு செல்வதாகக் கூறிச் சென்ற மாணவி மாலையில் வீடு திரும்பவில்லையாம்.
உறவினர்கள் மற்றும் தோழிகளின் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்காததால், தனது மகளை கண்டுபிடித்து தருமாறு அவரது தாய் மகேஸ்வரி, வாழப்பாடி போலீஸில் செவ்வாய்க்கிழமை புகார் செய்தார். இந்தப் புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அடுத்த 2 மணி நேரத்துக்கு 6 மாவட்டங்களில் மழை!

ரிஷப ராசிக்கு மனநிறைவு! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 09)

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 9 2026) 12 ராசிகளுக்கும்! துலா ராசிக்கு எப்படி?

செபி-யிடம் 400 ஜிபி ஆவணங்கள் சமா்ப்பிப்பு!
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP


