காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து வியாழக்கிழமை நடைபெறும் முழு அடைப்புப் போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரிடமும் ஆதரவு கோரி துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலர் எஸ்.ஆர்.சிவலிங்கம் தலைமையில் துணைச் செயலர் க.சுந்தரம், நெசவாளர் அணி அமைப்பாளர் எ.ஆறுமுகம், சங்ககிரி ஒன்றியச் செயலர் (பொறுப்பு) எஸ்.பி.நிர்மலா, நகரச் செயலர் முருகன், காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் உள்ளிட்ட பலர், சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்க அலுவலகத்தில் செயலர் கே.கே.நடேசன், பொருளாளர் என்.மோகன்குமார், துணைத் தலைவர் ஆர்.ஆர்.மோகன்குமார் உள்ளிட்டோரிடம் ஆதரவு கோரினர். பின்னர் சங்ககிரி பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலைய வளாகம், பவானி பிரதான சாலை, பழைய, புதிய எடப்பாடி சாலை, டி.பி.சாலை உள்ளிட்ட பகுதிகளில் வணிக நிறுவனங்கள், மளிகைக் கடைகள் மற்றும் பல்வேறு தரப்பு பொதுமக்களிடமும் ஊர்வலமாகச் சென்று ஆதரவு கோரி துண்டுப் பிரசுரங்களை வழங்கினர். இதில் திமுக உள்ளிட்ட அதன் தோழமை கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 9 - நேரலை!
மாநிலங்களவைத் தோ்தலில் கட்சி மாறி வாக்களிக்கலாம் என்ற அச்சம்: பெங்களூருக்கு அழைத்து வரப்பட்ட ம.பி. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்!

இந்தியாவிலிருந்து மாம்பழ இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள்: நேபாளம்

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய் - புகைப்படங்கள்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


