தடை செய்யப்பட்ட ஒரு முறை மட்டும் பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பைகளில், டீ, காபி போன்ற சூடான பொருள்களை பொட்டலமிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் எச்சரித்துள்ளார்.
ஜனவரி 1-ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. ஹோட்டல்கள், பேக்கரி கடைகள், சிற்றுண்டிகள், சில்லறை விற்பனைக் கடைகள் போன்ற உணவு வணிகர்கள் தமது கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்துவதை நிறுத்தி விட்டு, மாற்றுப் பொருள்களை பயன்படுத்த வேண்டும்.
உணவு பாதுகாப்பு மற்றும் தரம் சட்டம், 2006-இல் உள்ள வழிகாட்டுதல்களிலேயே ஐ.எஸ்.ஐ. முத்திரை பெறாத பிளாஸ்டிக்குகளில் உணவுப் பொருள்களை பொட்டலமிட பயன்படுத்தக் கூடாது என வரையறுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஹோட்டல்கள், பேக்கரி கடைகள், சிற்றுண்டிகளில் டீ, காபி போன்ற சூடான உணவுப் பொருள்களை பொட்டலமிடக் கூடாது.
அவ்வாறு பொட்டலமிடும் கடையினர் அந்தப் பழக்கத்தினை உடனடியாக மாற்றி பாத்திரங்கள், மற்ற ஏதேனும் கொள்கலன்களில் சூடான பொருள்களை வழங்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. அல்லது பிளாஸ்டிக் பூசப்படாத அலுமினியம் ஃபாயில் கவர்களில் சூடான பொருள்களை பொட்டலமிடலாம். இருப்பினும், நுகர்வோர்கள் சூடான உணவுப் பொருள்களை வாங்க பாத்திரங்கள் எடுத்துச் செல்ல கேட்டுக் கொள்ளப்படுகிறது.
சூடான உணவுப் பொருள்களை பிளாஸ்டிக்குகளில் அடைத்து விற்றால் முதல் முறை எச்சரிக்கை அறிவிப்பு வழங்கப்படும். மறுமுறையும் சூடான பொருள்களை பிளாஸ்டிக்குகளில் அடைத்து விற்பது கண்டறியப்பட்டால் கடையின் இயக்கத்தினை நிறுத்த சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், பிரட் மற்றும் பன் போன்ற பேக்கரி பொருள்களை ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளில் பொட்டலமிடக் கூடாது. அவற்றை உணவு பாதுகாப்புத் துறையின் அனுமதி பெற்ற ஐ.எஸ்.ஐ. முத்திரையுள்ள பாலி புரோப்பிலின் என்ற பேக்கிங் தாளில் பொட்டலமிட வேண்டும். பேக்கரியில் பொட்டலமிடப்படும் அனைத்துப் பொருள்களிலும் லேபிள் விவரங்கள் இருத்தல் அவசியமாகும்.
உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வுக்கு வருகை புரியும் போது விதிமீறல் கண்டறியப்பட்டால், லேபிள் இல்லாத பிரட் மற்றும் பன் போன்ற உணவுப் பொருள்கள் பறிமுதல் செய்து அழிக்கப்படுவதோடு, வழக்கும் பதிவு செய்யப்படும் என ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் எச்சரித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா?

திருநெல்வேலி மனோன்மணியம் பல்கலை.யில் சேர ஜூன் 12-ல் நுழைவுத் தேர்வு

தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை!

பாரதிராஜாவுக்கு என்னைப் பிடிக்கும்; என் நடிப்பு பிடிக்காது! ரஜினிகாந்த் பேட்டி
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


