தம்மம்பட்டியில் இரவு நேரங்களில் திறந்த வெளிக்கழிப்பிடங்களுக்குச் செல்லும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த இளைஞரை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
தம்மம்பட்டி 16-வது வார்டு தென்றல் நகரில் இரவு நேரங்களில் இயற்கை உபாதையைக் கழிக்கச் சென்ற பெண்களை மர்ம நபர் ஒருவர் பலாத்காரம் செய்ய முயன்று வந்துள்ளார். இதுகுறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், தம்மம்பட்டி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, மர்ம நபர்களை கைது செய்ய வலியுறுத்தினர்.
இந்த நிலையில், புதன்கிழமை காலை அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் துணி துவைத்துக் கொண்டிருந்த பெண்ணை, காட்டுப் பகுதியில் நின்று கொண்டு ஒருவர் அழைத்துள்ளார். இதனையடுத்து அந்த பகுதியைச்சேர்ந்த மக்கள் ஒன்று சேர்ந்து அந்த நபரைப் பிடித்து தம்மம்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், அந்த நபர், அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி மகன் கட்டட மேஸ்திரி தமிழ்ச்செல்வன் (23) என்பது தெரியவந்தது.
இதுகுறித்து காவல் ஆய்வாளர் விஜயகுமார் கூறுகையில், பெண்களை மானபங்கம் செய்ய முயற்சித்தல், தவறான நோக்கத்துடன் அழைத்தல் உள்ளிட்ட மூன்றுக்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து தமிழ்ச்செல்வனை கைது செய்துள்ளதாக தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி மறுசீரமைப்பு, மத்திய அரசின் பாரபட்சமான நடவடிக்கை: விஜய் கண்டனம்!
15 ஆண்டுகள் திருடர்கள் ஆட்சி! ராமருக்கு ஒருமுறை வாய்ப்பு கொடுங்கள்! பாஜக தலைவர்

விசிக மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற திமுகவே காரணம்: தொல் திருமாவளவன் பேச்சு

உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

