/

திரெளபதி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

ஆத்தூர் அருள்தரும் திரெளபதி அம்மன் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜையில் மத்திய கூட்டுறவு வங்கியின் மாநிலத் தலைவர் ஆர். இளங்கோவன் கலந்து கொண்டார்.

Updated On :21 மே 2018, 1:04 am

ஆத்தூர் அருள்தரும் திரெளபதி அம்மன் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜையில் மத்திய கூட்டுறவு வங்கியின் மாநிலத் தலைவர் ஆர். இளங்கோவன் கலந்து கொண்டார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருள்தரும் திரெளபதி அம்மன் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு சிறப்பு யாகமும், அதைத் தொடர்ந்து அபிஷேகம் காளியம்மன் அலங்காரம் செய்யப்பட்டது. ஆத்தூர் போயர் சமூகத்தினர் கட்டளைதாரர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதனையடுத்து அன்னதானம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் போயர் சமூகத் தலைவர் பி.டி.தியாகராஜன், ஆத்தூர் நகர காங்கிரஸ் தலைவர் எல். முருகேசன், ஒப்பந்ததாரர்கள் செல்லக்கண்ணு, கே. மாதேஸ்வரன், செல்வம், தர்மர் ,ரவி,முன்னாள் நகரமன்ற உறுப்பினர் சகுந்தலா தியாகராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மாலை நடைபெற்ற நிகழ்ச்சியை ஏற்பாட்டை கட்டளைதாரர் ஆத்தூர் அதிமுக நகரச் செயலாளரும், முன்னாள் நகரமன்றத் துணைத் தலைவருமான அ.மோகன்  செய்திருந்தார். இதில் சிறப்பு விருந்தினராக  ஆர். இளங்கோவன், ஆத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் ஆர்.எம். சின்னதம்பி, சேலம் மாவட்ட துணைச் செயலாளர் ஏ.டி.அர்ச்சுணன், எம்.அசோக் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.