வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

தீபாவளி ஜவுளி, பொருள்கள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்!

தீபாவளிப் பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் ஜவுளி மற்றும் பொருள்கள் வாங்குவதற்காக கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

Updated On :5 நவம்பர் 2018, 8:43 am IST

தீபாவளிப் பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் ஜவுளி மற்றும் பொருள்கள் வாங்குவதற்காக கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
தீபாவளிப் பண்டிகை  செவ்வாய்க்கிழமை (நவ. 6)  கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஜவுளிக்கடைகள், பட்டாசுக்கடைகள்  மற்றும் இனிப்பு கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
தீபாவளிக்கு இன்னும் ஒருநாள் மட்டுமே உள்ள நிலையில் டவுன் சின்னக்கடை வீதி,  பெரிய கடை வீதி, அருணாசல ஆசாரி தெரு, தாதுபாய்குட்டை ஆகிய பகுதிகளில் உள்ள ஜவுளிக் கடைகள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி
வழிகிறது.
அதேபோல  நான்கு சாலை, புதிய பேருந்து நிலையம், ஐந்து சாலை பகுதிகளில் உள்ள பெரிய ஜவுளிக் கடைகளிலும் புத்தாடை வாங்க பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் குவிந்தனர். மாநகரப் பகுதியில் பட்டாசுக் கடை, இனிப்புக் கடைகள் மற்றும் பலகாரக் கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு உள்ளிட்ட அசம்பாவிதச் சம்பவங்களைத் தடுக்கும் பொருட்டு மாநகர போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.