பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!தூத்துக்குடி பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு: தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என தீர்ப்பு கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலை
/

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நொடிக்கு 6,014 கனஅடியாக அதிகரித்துள்ளது.

Updated On :8 அக்டோபர் 2018, 9:15 am IST

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நொடிக்கு 6,014 கனஅடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சனிக்கிழமை காலை 5,471 கனஅடியாக  இருந்த நீர்வரத்து, ஞாயிற்றுக்கிழமை காலை நொடிக்கு 6,014 கனஅடியாக அதிகரித்துள்ளது. 
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 1,000 கனஅடி வீதமும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு நொடிக்கு 200 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 67.88 டி.எம்.சி.யாக இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.