மேட்டூர், ஜூன் 13: கர்நாடக மாநிலத்தல் காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து லேசான மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 700 கனஅடிக்கு குறையாமல் வந்துகொண்டிருக்கிறது.
புதன்கிழமை காலை நொடிக்கு 722 கனஅடி வீதம் வந்துகொண்டிருந்த நீர்வரத்து வியாழக்கிழமை நொடிக்கு 733 கனஅடியாக அதிகரித்தது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக நொடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட குடிநீருக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் புதன்கிழமை காலை 45.53 அடியாக இருந்த நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 45.47 அடியாக சரிந்தது. அணையின் நீர் இருப்பு 15.07
டி.எம்.சியாக இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.