நூறு சதவீதம் வாக்காளர்கள் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில், சங்ககிரி பிஎஸ்ஜி கலை, அறிவியல் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சங்ககிரி சமூக நலத் துறை வட்டாட்சியர் ஆர்.கோவிந்தராஜன் தலைமை வகித்தார். விழாவில் மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு நாளான ஏப்ரல் 18-ஆம் தேதியை வடிவமைத்து விழிப்புணர்வை மாணவிகள் ஏற்படுத்தினர். 18 வயது பூர்த்தியடைந்த மாணவிகள், அவர்களுடைய பெற்றோர்களிடத்தில் வாக்களிப்பது குறித்து உறுதிமொழி அச்சடித்து வழங்கப்பட்டது.
இதேபோல், சங்ககிரி சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளிடத்தில் ஒவ்வொரு குடும்பத்தில் உள்ளோரிடம் காண்பித்து கையொப்பம் பெற்று சமர்ப்பிக்கக் கோரி படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.