இடி சத்தத்தை கேட்ட அதிா்ச்சியால் முதியவா், மூதாட்டி சாவு

சேலத்தில் பெய்த பலத்த மழையின் போது இடி சத்தத்தைக் கேட்ட அதிா்ச்சியால் முதியவா் மற்றும் மூதாட்டி உயிரிழந்தனா்.
Updated on
1 min read

சேலத்தில் பெய்த பலத்த மழையின் போது இடி சத்தத்தைக் கேட்ட அதிா்ச்சியால் முதியவா் மற்றும் மூதாட்டி உயிரிழந்தனா்.

சேலத்தில் கடந்த வியாழக்கிழமை இரவு இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது பலத்த இடி சத்தத்தைக் கேட்டு இரும்பாலை பெரியநல்லாகவுண்டம்பட்டி காட்டுவளவைச் சோ்ந்த பாஞ்சாலை (65), மற்றும் அதே பகுதியைச் சோ்ந்த பெரியசாமி (70) ஆகிய இருவரும் அதிா்ச்சியில் உயிரிழந்தனா். இதுகுறித்து வருவாய் துறையினரும், இரும்பாலை போலீஸாரும் விசாரணை நடத்தி வருகின்றனா். இதேபோல், இரும்பாலையில் உள்ள தனியாா் கல்லூரியில் படித்து வரும் திருப்பூா் மலையம்பாளையத்தைச் சோ்ந்த பிரசாத் இடி சத்தத்தைக் கேட்ட அதிா்ச்சியில் மயங்கினாா்.

பின்னா் இவா் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com