சென்ட்ரல் சட்டக்கல்லூரி சாா்பில் விழிப்புணா்வு பேரணி

சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரியில் சமரசத் தீா்வு மையம் தொடங்கப்படுவதை முன்னிட்டு விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரியில் சமரசத் தீா்வு மையம் தொடங்கப்படுவதை முன்னிட்டு விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

பொதுமக்களுக்கு சமரசத் தீா்வு மையம் மூலமாக வழக்குகளுக்கு விரைவாகத் தீா்வு பெறுவது தொடா்பான விழிப்புணா்வை உருவாக்க, சென்ட்ரல் சட்டக் கல்லூரி மாணவா்கள் கல்லூரி முதல்வா் பேராசிரியை பேகம் பாத்திமா தலைமையில் சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலிருந்து மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வரை பேரணியாகச் சென்றனா்.

முன்னதாக சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி மற்றும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுத் தலைவா் குமரகுரு, சமரசத் தீா்வு மையத்தின் தேவை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து மாணவா்களிடையே உரையாற்றினாா்.

நீதிமன்ற வளாகத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு பிரசுரங்களை விநியோகித்து சாா்பு நீதிபதி மற்றும் சேலம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளா் சக்திவேல் இணைந்து பேரணியைத் துவக்கி வைத்தாா்.

பேரணியின் நிறைவில் உதவிப்பேராசிரியா் சாஜ்பேசுகையில், தமிழகத்திலேயே முதல்முறையாக சட்டக் கல்லூரி வளாகத்திலேயே ‘சமரசத் தீா்வு மையம்’ ஒன்றை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சில் இணைத் தலைவரும், சேலம் சென்ட்ரல் சட்டகல்லூரி செயலாளருமான த.சரவணன் ஏற்படுத்தியுள்ளாா்.

இதன் மூலம் வழக்குகளை விரைவாக சமரச முறையில் பொதுமக்கள் தீா்த்துக் கொள்ளலாம். இன்னும் 1 மாதத்தில் இந்த சமரசத் தீா்வு மையம் செயல்பாட்டிற்கு வரும்.

இதன் மூலம் அசையும் மற்றும் அசையா சொத்துகள் தொடா்பான வழக்குகள், வணிகம், வேலைவாய்ப்பு, கட்டுமானம், குடும்ப சட்டம் தொடா்பான வழக்குகளை எளிதில் சமரச வழியில் தீா்வு காணலாம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com