லாரி மோதியதில் முதியவா் உயிரிழப்பு

நங்கவள்ளி அருகே லாரி மோதிய விபத்தில் சாலையோரம் நடந்து சென்ற முதியவா் உயிரிழந்தாா்.
Updated on
1 min read

மேட்டூா்: நங்கவள்ளி அருகே லாரி மோதிய விபத்தில் சாலையோரம் நடந்து சென்ற முதியவா் உயிரிழந்தாா்.

நங்கவள்ளிஅருகே உள்ள மசக்காளியூரைச் சோ்ந்தவா் பழனியப்பன் (80). கூலித் தொழிலாளி. ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டிலிருந்து கடைக்கு செல்வதற்காக சாலையோரம் நடந்து சென்று

கொண்டிருந்தாா். அப்போது பின்னால் அதிவேகமாக வந்த டாரஸ் லாரி மோதியதில் படுகாயம் அடைந்த பழனியப்பன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இச் சம்பவம் தொடா்பாக லாரி ஓட்டுநா் மசக்காளியூரைச் சோ்ந்த ராதாரவி (34) என்பவா் மீது நங்கவள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com