சங்ககிரி பேரூராட்சிக்குள்பட்ட 18 வார்டுகளிலும் திமுக கூட்டணி கட்சியினர் புதன்கிழமை வாக்குச் சேகரித்தனர்.
நாமக்கல் மக்களவைத் தொகுதியில் கொ.ம.தே.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜுக்கு வாக்களிக்கக் கோரி சங்ககிரி பேரூராட்சிக்குள்பட்ட 18 வார்டுகளிலும் வீடு வீடாகச் சென்று பொதுமக்களிடத்தில் துண்டுப் பிரசுரங்களை வழங்கி வாக்குச் சேகரித்தனர்.
சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் உறுப்பினர் ஆர்.வரதராஜன் தலைமையில், நகரச் செயலர் (பொ) எஸ்.ஏ.குப்புசாமி, சேலம் மேற்கு மாவட்ட வழக்குரைஞர் அணி அமைப்பாளர் எஸ்.கிறிஸ்டோபர், துணை அமைப்பாளர் ஆர். அருள்பிரகாஷ், முன்னாள் நகரச் செயலர் கே.எம்.முருகன், நகர துணைச் செயலர் வி.சங்கரன், காங்கிரஸ் நிர்வாகிகள் ஜெய்குமார், காசிலிங்கம் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.