ஆத்தூரில் அமமுக வேட்பாளர் கோமுகிமணியன் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட ஆத்தூர் சட்டப் பேரவைத் தொகுதியில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
அவருடன் மாவட்டத் தலைவர் க. சண்முகம், மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர் காட்டுராஜா (எ) எம். பழனிசாமி, மாவட்டப் பொருளாளர் எஸ். மாதேஸ்வரன், ஒன்றியச் செயலாளர் கணேசன், ஆத்தூர் நகரச் செயலாளர் என். ராஜேந்திரகுமார், நரசிங்கபுரம் நகரச் செயலாளர் சீனிவாசன், தலைவாசல் ஒன்றியச் செயலாளர் பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.