கெங்கவல்லி சட்டப்பேரவைத் தொகுதி முழுவதும் வாக்குச் சாவடி நிலைய அலுவலர்கள் வாக்குச் சாவடி சீட்டுகளை வீடு வீடாக சென்று விநியோகித்து வருகின்றனர்.
கெங்கவல்லி சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 263 வாக்குச் சாவடிகளிலும் உள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் புகைப்படத்துடன் கூடிய வாக்குச் சாவடி சீட்டுகளை அந்தந்த பகுதிகளின் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் வீடுவீடாகச் சென்று விநியோகம் செய்துவருகின்றனர்.
16 ஆம் தேதி மாலை 80 சதவீத சீட்டுகள் விநியோகம் செய்யப்பட்டுவிட்டன. எஞ்சிய சீட்டுகள் 17-ஆம் தேதி முற்பகலுக்குள் விநியோகிக்கப்பட்டுவிடும். பூத் சீலிப்கள் இருந்தாலும், வாக்காளர்கள், தேர்தல் ஆணையம் வகுத்துள்ள 12 வகையான ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை உடன் எடுத்துச் செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.