சாலை பாதுகாப்பு வார விழா
By DIN | Published On : 12th February 2019 08:59 AM | Last Updated : 12th February 2019 08:59 AM | அ+அ அ- |

தம்மம்பட்டி மக்கள் குழு சார்பாக சாலை பாதுகாப்பு வார விழா தம்மம்பட்டி காவல் ஆய்வாளர் விஜயக்குமார் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
பள்ளி தலைமையாசிரியர் ராஜலிங்கம் வரவேற்றார். இந் நிகழ்ச்சியில் மேல்நிலைப் பள்ளியில் படித்து அரசு பொதுத் தேர்வில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டன. மக்கள் குழு சார்பில் பி.வி. செந்தில்குமார், சண்முகம், சதீஷ், திருச்செல்வன்,ரவிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.