166 தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு அகராதிப் பயன்பாடு பயிற்சி

கெங்கவல்லி, தம்மம்பட்டியில் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு இரண்டு கட்ட ஒருநாள் பயிற்சி நிறைவுபெற்றது.
Updated on
1 min read

கெங்கவல்லி, தம்மம்பட்டியில் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு இரண்டு கட்ட ஒருநாள் பயிற்சி நிறைவுபெற்றது.
கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியத்திலுள்ள தொடக்க நிலை ஆசிரியர்கள் 166 பேருக்கு இரண்டு கட்டமாக இரண்டு நாள் பயிற்சி தம்மம்பட்டி, கெங்கவல்லியில்  நடைபெற்றது.
பயிற்சிக்கு  வட்டாரக் கல்வி அலுவலர்கள் வாசுகி, அந்தோணிமுத்து தலைமை வகித்தனர்.
பயிற்சிகளை ஆசிரிய பயிற்றுநர்கள் பச்சையம்மாள், செல்வராஜ், ஆசிரியர்கள் சுப்ரமணி, மணிமேகலை ஆகியோர் இரு மையங்களிலும் வழங்கினர்.
பயிற்சியில் செயல்வழிக் கற்றலில் புதிய அணுகுமுறை, அகராதிப் பயன்பாடு, எளிய படைப்பாற்றல் கல்வி ஆகிய தலைப்புகளில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. இரு நாள்களில் இரண்டு இடங்களில் நடைபெற்ற பயிற்சிகளில் ஒன்றியத்திலுள்ள தொடக்க நிலை ஆசிரியர்கள் 166 பேர் பங்கேற்றுப் பயிற்சி பெற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com